
திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது.
கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்.பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி மியான் அல்தாஃப் அகமது, பாஜக எம்.பி கேப்டன் பிரிஜேஷ் சௌக்தா, ஆர்ஜேடி எம்.பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி எம்.பி அசோக் குமார் மிட்டல், முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்பி ஜாவேத் அஷ்ரஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.