
வேலூர் மாவட்டம், நாதவனூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(வயது 23). இவர், சென்னை மேற்கு தாம்பரம், புலி கொரடு, கன்னடப்பாளையத்தில் நண்பர் சுபாஷ் சந்திர போஸ் என்பவருடன் தங்கி, பிரபல உணவு வினியோக நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, தாம்பரம் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பம் ஒன்று, காற்றின் வேகத்தில் உடைந்து, மேம்பாலத்தின் கீழே மழைக்காக ஒதுங்கி நின்ற சூர்யா தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முறையான பராமரிப்பு இல்லாததால் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அஜாக்கிரதையாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களின் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து மாநகராட்சி என்ஜினீயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது