
வெயிலில் அதிகம் நின்று வேலை செய்பவர்கள், மூலநோய் உள்ளவர்கள், உடலில் அதிகமாக சூடு உள்ளவர்கள் ஆகியோருக்கு நீர்ச்சத்து குறைந்து அதன் மூலம் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் தன் இயக்கத்திற்கு தேவையான நீரை உடலுக்குள் உள்ளதை உரிஞ்சிக் கொள்வதால், உடலில் நீர்ச்சத்துகள் குறைந்து விடுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் இரத்த அளவின் வேகம் குறைந்து தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு தலையின் நரம்புகள் கூட புடைக்கலாம். இது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வுதான். பயப்பட தேவையில்லை. இது போன்று தலைவலி ஏற்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிப்பதும், அதிக பழ ரசங்களை குடிப்பதும் நன்று. மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதேப்போன்று வெயிலில் பணிபுரிபவர்கள்,மூலநோய் உள்ளவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். தயிரில் ஏலக்காய் பொடியை கலந்து சாப்பிடுவது நல்லது. லெஸ்ஸியில் ஏலக்காய் பொடி சேர்த்து குடித்தல் நலம்.