நடிகர் சல்மான் கான் கட்டுடல் கொண்ட கதாநாயகனாகவும் வலம் வருகி றார்

கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ என்ற படத் தில் சல்மான்கான் நடித்து இருந் தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சினிமா மட்டுமின்றி டி.வி.யில் இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ‘முரட்டு சிங் கிள்’ ஆக வலம் வருகிறார். சமீப காலமாக உடல் சோர்வுடன் காணப்படும் சல்மான்கான், தனது உடலில் இருக்கும் பிரச்சினை குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது, “டிரைஜெமினல் நியூரால்ஜியா அக் என்ற நோய் காரணமாக, எனது மூளையில் ரத்த நாள வீக்கம் பிரச் சினை இருக்கிறது. அதுமட்டுமின்றி ஏ.வி. மால்பார்மேஷன் என்ற பிரச்சினையும் எனக்கு இருக்கிறது. இத்தனை இருந்தும் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். எல்லாம் என் ரசிகர்களுக் காக…”, என்றார்.

சல்மான்கான் குறிப்பிட்ட டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற பிரச் சினையால் முகத்தில் அடிக்கடி கூர்மையான வலி ஏற்படும் என்பதும், இந்த நோயை மருத்துவ உலகில் ‘தற்கொலை நோய்’ என அழைப்பார் கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.