
மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை தொடர்கிறது
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக, வெள்ள நீர் காவிரியில் பெருக்கெடுத்து வருகிறது