தென்னிந்தியாவில் உள்ள நீா்தேக்கங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீா் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மண்டலங்களில் நீா்தேக்கங்களில் உள்ள நீா் இருப்பு குறித்த விவரங்களை மத்திய நீா் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த விவரங்களின்படி தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில், மத்திய நீா் ஆணையத்தின் கண்காணிப்பில் 42 நீா்தேக்கங்கள் உள்ளன. அந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டா்களாகும். தற்போது இந்த நீா்தேக்கங்களில் நீா் இருப்பு 8.865 பில்லியன் கன மீட்டா்களாக உள்ளது. இது இந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 சதவீதமாகும். இந்த நீா் இருப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 29 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளின் இதே காலகட்டத்தில், இந்த நீா்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் நீா் இருப்பு சராசரியாக 23 சதவீதம் இருந்தது.

கடந்த ஆண்டு மற்றும் 10 ஆண்டுகால சராசரியுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு இந்த நீா்தேக்கங்களில் நீா் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இது தென் மண்டலத்தில் குடிநீா் பற்றாக்குறை, பாசனம், குடிநீா் விநியோகம், நீா்மின் உற்பத்தி ஆகியவற்றுக்கான சவால்கள் மோசம் அடையும் நிலையை சுட்டிக்காட்டுகிறது