
துக்க நிகழ்சிக்கு சென்ற ஐ.டி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை.
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பல்லாவா கார்டன் 8 வது தெருவை சேர்ந்தவர் குமரன் (44), இவர் மனைவியின் தந்தை கும்பகோணத்தில் வசித்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னதாக காலமானர். அந்த துக்க நிகழ்வுக்கு 30ம் தேதி வீட்டை பூட்டி சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தபோது கிரில் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து குமரனுக்கு தகவல் அளித்த நிலையில் நண்பர்களை அனுப்பி பார்த்துள்ளார். வீட்டில் 2 பிரோக்கள் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரிய வந்த நிலையில் அதிர்ச்சியடைந்தனர். குமரன் குடும்பத்துடன் வீடுவந்து பார்த்தபோது 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் வீட்டின் முன்பாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது வடமாநில நபர்கள் தோற்றத்தில் இரண்டு இளைஞர்கள் கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து குமரன் பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் கோவிந்திடம் புகார் செய்த நிலையில் கைரேகை, சிசிடிவி காட்சி உள்ளிட்ட தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகிறார்கள்.