தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் (இரும்புச்சத்து) துத்தநாக மாத்திரை பெட்டகம் வழங்கும் விழா நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் தொடங்கி வைத்து (ஓ.ஆர்.எஸ்) கரைசல் அதன் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறை குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஜோசப்சேவியர் மற்றும் அரசு மருத்துவர், செவிலியர்கள், பொதுமக்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.