ய​முனா விரைவு சாலை​யில் கடும் பனி மூட்​டம் காரண​மாக வாக​னங்​கள் அடுத்​தடுத்து மோதி பேருந்து தீப்​பிடித்து எரிந்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ஆகியோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

டெல்லி உள்​ளிட்ட வட மாநிலங்​களில் கடும் பனிப்​பொழிவு தொடங்கி உள்​ளது. இதனால் அதி​காலை​யில் சாலை​யில் முன்​னால் செல்லும் வாக​னங்​கள் பார்வைக்கு தெரி​யாத நிலை உள்​ளது.