ஜிஎஸ்டி வரி கடந்த 2017-18-ம் ஆண்​டில் ரூ.7.19 லட்​சம் கோடி​யாக இருந்​தது. இது 2025-ம் ஆண்​டில் ரூ.22.08 லட்​சம் கோடி​யாக உயர்ந்​தது. நாட்​டில் வரி செலுத்​து​வோர் எண்​ணிக்கை முன்பு 65 லட்​ச​மாக இருந்​தது. இது தற்​போது 1.51 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் நாட்​டின் பொருளா​தா​ரத்​தில் ரூ.2 லட்​சம் கோடி நுழை​யும், மக்​கள் கையில் பணம் புரளும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.