தாம்பரம் அருகே மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க 200 ரூபாய் கொடுத்த போது சில்லறை இல்லை எனக்கூறி இளைஞரை ஆபாசமாக பேசிய மாநகர போக்குவரத்துகழக நடத்துனர்

இணையத்தில் வைரலாகும் வீடியோ

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை நெல்லையில் இருந்து ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் ஏறி சென்றுள்ளார்.

தாம்பரத்தில் ஏறும் பொழுது ஊரப்பாக்கம் செல்ல வேண்டும் என கூறி 200,ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டிருக்கிறார் நடத்துனர். சில்லறை இல்லை என கூறி டிக்கெட் தர மறுத்திருக்கிறார் நீண்ட நேரமாக தன்னிடம் வேறு பணம் இல்லை 200 ரூபாய் தான் இருக்கிறது என இளைஞர் டிக்கெட் கேட்டபடி வந்துள்ளார்.

அதற்குள் ஊரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்ததால் மீண்டும் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் கொடுங்கள் என கேட்ட பொழுது இளைஞரை நடத்துனர் ஆபாசமாக பேசி அடிக்கப் பாய்ந்துள்ளார். இதைப் பார்த்த மற்ற பயணிகள் நடத்துனுரை கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த காட்சியை பதிவு செய்த இளைஞர் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்‌.

டிக்கெட் எடுக்காமல் சென்றால் பரிசோதகர் பிடித்துக் கொள்வார்கள் டிக்கெட் எடுக்க பணம் கொடுத்தால் சில்லறை இல்லை எனக் கூறி இளைஞரை எப்படி மாநகரப் போக்குவரத்துக் கழக நடத்துனர்.

ஆபாசமாக பேசலாம் என பலரும் மாநகர போக்குவரத்து கழக நடத்துனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…