திண்டுக்கல்: கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

கொடைக்கானலுக்கு கடந்த திங்கள்கிழமை குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப்மைதானத்துக்கு முதல்வர் சென்றார். சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, மாலை 5.45 மணிக்குமேல் கோல்ப் கிளப்புக்குச் சென்ற முதல்வர், அங்கிருந்து பேட்டரி கார்மூலம் மைதானத்துக்குச் சென்றார்.அங்கு சுமார் அரை மணி நேரம் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.