நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர் செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கையாக சுவாசித்து வருகிறார். வயதுமூப்பு காரணமாக தேவைப்படும் நேரத்தில் மட்டும் அவ்வப்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கிறோம். நல்லகண்ணு இயல்பு நிலைக்கு திரும்பியதும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றார்கள்.