செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார் மலை கிராமத்தில் சர்வே எண் 146/2 ல் 15 கிரவுண்ட் அரசு நிலம் குத்தகை காலம் முடிந்து பின்னரும் வணிக ரீதியான கட்டிடம் செயல்ப்ட்டு வந்ததால் செங்க்ல்பட்டு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தத்து. ஆனால் நிலம் தொடர்பான வழக்கு ஆலந்தூர் உரிமையியல் நிதிமன்றத்தில் நடந்தது. இதில் நிலம் அரசுக்கு ஒப்ப்டைக்க தீர்ப்புப்வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா உத்திரவின் பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் கொட்டும் மழையிலும் அரசு நிலத்தில் செயல்பட்ட சரவணபவன் ஒட்டல் ஊழியர்களை வெளியேற்றி, ஓட்டல் பெயர் பலகைகளை அகற்றிய நிலையில் இரண்டு முகப்பு வாயில் முடப்பட்டு சீல் வைக்கப்பட்டது,

ஜி.எஸ்.டி சாலை விமான நிலையம் அருகே உள்ள 15 கிரவுண்ட் நிலம் ரூ. 300 கோடி மதிப்புள்ளது என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,

அதிகாலையில் வருவாய் துறை அதிரடி நட்வ்டிக்கை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.