நடிகர் அஜித்குமார் வெளிநாட்டு பத்திரிகை அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் அவர் கூறியதாவது:-

ரசிகர்கள் அன்பை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எல்லாரும் என் ரசிகர்கள் என்று நான் எப்படி நம்ப முடியும்? ஏன் இதை சொல்கிறேன் ப என்றால் ‘2005ல் நான் காரில் சென்று கொண்டு இருந்த போது ரசிகர்கள் சுற்றி நின்று இருந்தனர். அப்போது கண்ணாடியை திறந்து அவர்களுக்கு கை கொடுத்தேன். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் கை முழுவதும் ரத்தம். என் கையை பிளேடால் கிழித்து இருக்கிறார்கள். அந்த காயம் இன்று வரை இருக்கிறது. இதுபோன்று பல முறை நடந்து இருக்கிறது.ஒரு ஹோட்டலில் கூட ரசிகர் கூட்டத்தில் ஒரு 19 வயசு பையன் கையில் பிளேடை பாதியா உடைச்சி மறைத்து வைத்து இருந்தான். ஹோட்டல் ஊழியர் தான் அந்த பையன தடுத்தார். இதெல்லாம் மீடியாக்கு தெரியுமா?
என்று கேள்வி விடுத்தார்