சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டதாக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்

இவ்வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்திருந்தார்