நெல்லை, தூத்துக்குடியில் பெரும் வெள்ளம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டின் மொட்டை மாடியில் உயரமான சுவர்களில் ஒரு வித பூச்சிகள் வந்தன.இப்பூச்சிகளின் வருகையால் திகைத்துப்போனவர்கள் இதனை விரட்ட படாதபாடு பட்டும் பயனில்லை! ஊர்ந்தும், பறந்தும் சுவர்களின் விளிம்புகளில் புகலிடம் தேடிக்கொண்டன! இரண்டு நாட்களுக்குப் பிறகு … இப்பூச்சிகளில் எந்த அளவு உயரத்தில் இருந்ததோ, அதன் உயரத்திற்கு ஓரடி கீழே மழைநீர் வந்தது! நெல்லை, தூத்துக்குடியில் வழக்கத்திற்கு மாறாக வானிலை கணிப்புகளைக் கடந்தும் கனமழை பெய்யுமென்றும், பெரும் வெள்ளம் சூழும் என்றும் இப்பூச்சிகள் இரண்டு நாட்களுக்கு முன்னமே உணர்ந்துள்ளன! இப்பூச்சிகளின் பெயர் விதைப்பூச்சி என தெரிய வந்தது. முதுகுப்பகுதியில் தடித்த செந்நிற இறகுகளின் மீது மூன்று கரும் புள்ளிகள் இருந்தன.மேலுள்ள புள்ளி முக்கோண வடிவிலும், கீழ் உள்ள இரண்டு புள்ளிகள் வட்டமாகவும் உள்ளன. இந்த விதைப்பூச்சிகள் முற்றிலும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளன.