பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜாரில் ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாப கோவில் கட்டப்பட்டு நான்குகால யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது.

பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜார் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாபா கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. 10ம் தேதி துவங்கி பிரவேசவேலி, புன்யாவகம், கோ பூஜை நடைபெற்ற நிலையில் இன்று வேதவிற்பன்னர்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் நடத்திய நிலையில் புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

அதனையொட்டி கற்பகிரகத்தில் அமைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்ட ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாபா சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவரும் பாபா சிலையை தொட்டு வனங்கி சென்றனர்.

இதனையடுத்து நன்பகல் அன்னதானம் நடைபெற்றது.

கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல், பல்லாவரம் சுற்றுவட்டத்தில் இருந்து பக்கதர்கள் கலந்துக்கொண்டனர்.