
தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு 400 கிராம், சர்க்கரை 300 கிராம், நெய் 2 ஸ்பூன், லெமன் எல்லோ பவுடர் 1 ஸ்பூன், ஏலக்காய் 10 பீஸ், குங்குமப்பூ 1/4 ஸ்பூன் செய்முறை: பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் வைத்து 2 நிமிடங்கள் கழித்து, அவைகளின் தோலை உரித்து விடவும். பின்பு தண்ணீரில் 2 முறை அலசி எடுத்துக் கொள்ளவும். அலசிய பாதாம் பருப்புகளை 100 மி.லி. தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்பு அடுப்பில் வாணலியை ஏற்றி அதில் பாதாம் பருப்பு விழுது சர்க்கரையைப் போட்டு நன்றாக உருட்டும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு வாணலியைக் கீழே இறக்கி பாதாம் பருப்பு விழுது, சர்க்கரை கலவையில் நெய்விட்டுக் கிளற வேண்டும். அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் கிளறினால் அல்வாவின் நிறம் மாறி வரும் என்பதால் தான் வாணலியை இறக்கிய பின்பு நெய் ஊற்றிக் கிளற வேண்டும். நெய்விட்டு நன்கு கிளறிய பின்பு அந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். பின்பு அதில் ஏலப்பொடி, குங்குமப்பூ போட வேண்டும். லேசாக கிளறி, ஆறவைத்து பரிமாறலாம்.