தேவையான பொருட்கள்: மைதா 500 கிராம் (4 கப்), தண்ணீர் 250 மிலி (1 கப்), உப்பு 1 லு தேக்கரண்டி, சர்க்கரை 2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் பிசையவும். மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 60 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். அடுத்து அதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து விரித்து விரித்து பரோட்டா போன்று விரித்து எடுத்து, எண்ணெய் சேர்க்கவும். ஒரு கத்தி வைத்து 2 மிமீ இடைவெளியுடன் விரித்த மாவை வெட்டிக்கொள்ளவும்.அதை அப்படியே சுருட்டிக் கொள்ளவும். ஒரு தவாவை சூடாக்கி எண்ணெய் சேர்த்து, 2 நிமிடம் பரோட்டாவை வேக வைக்கவும்.இறுதியாக தட்டில் வைத்து தட்டுவதன் மூலம் நூல் பரோட்டா பஞ்சு போல் தயாராகி விடும்.