சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது.

அதன்படி வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

27ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

31ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15ம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும்.

அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

தொடர்ந்து 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும்.

அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.