கார் மாதத் தவணை கட்ட தாமதமானதால் தொழிலதிபரை தாக்கிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்

பைனான்ஸ் நிறுவனத்தை தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை

சேலையூரை சேர்ந்தவர் ஆனந்தன் (43).
இவர் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்சியல் லோன் பெற்று கார் ஒன்று வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ஒரு மாத தவணை கட்டவில்லை என வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆனந்தனை தாக்கியுள்ளார். இதில் ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆனந்தன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆனந்தனுக்கு ஆதரவாக தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வந்து பேசிக்கொள்ளும்படி கூறி அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர்.