
· பெயிண்ட் கோலம் வண்ணமாக போடும் போது ஒரு கலர் காய்ந்த பின் அடுத்த கலரைத் தீட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் கலருக்குச் சேர்க்கும் டர்பன்டைன் (அ) கெரோசின் வழிந்து முதலில் போட்ட கலரையும் வீணாக்கிவிடும்.
· வண்ணக்கோலம் வாசலில் இடுபவர்கள் சலித்த நைஸ் மணலைச் சேர்த்துப் போடலாம். வண்ணப்பொடியை அப்படியே உபயோகித்தால் நைசாக இருப்பதினால் காற்றில் பறந்து கலர் குழம்பிவிடும்.
· உங்கள் பழைய வளையல்களை ரங்கோலி கோலம் டிசைன்களுக்கு பயன்படுத்தலாம்.
· இரண்டு வண்ணங்களை சரியான அளவில் கலந்தால், வேறு ஒரு நிறம் கிடைக்கும். கலர் மாவு இல்லாத பட்சத்தில் இதை முயற்சி செய்யலாம்.
· கலர் பொடியை உப்பால் கலந்தால், ஷைனிங் தோற்றம் கிடைக்கும்.