
சிவபெருமானின் “ஆருத்ரா தரிசனம்” மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாட ப்படுகிறது. இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் அகானிவடிவாக நின்ற நாள் என்பதால் திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்தகரமாகிறது; ”ஆதிரையான்” என்று சிவனை அழைப்பர்.இவ்விழாவைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டு ள்ளனர். தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திர கோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
இவ்விழாவின் போது திருவாதிரைக் களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப் படைக்கப்படுகின்றன. ‘திருவாதிரைக்கு ஒருவாய் களி’ என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கோள்வோர், நடனகலையில் சிறக்கலாம்.