அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.560 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,040 அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.365க்கு விற்பனையாகிறது.
குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்
குரோஷியா நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. அதன்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர். மேலும், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்!! மீண்டும் 2.0 ஆட்சி!!! – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! எங்களின் சாதனைகளை மிஞ்சும் அளவுக்கு திமுக […]
பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
முதல்வர் ஸ்டாலின் பதிவு: “தமிழ்நாடு என்டிஏ-வின் துரோகங்களை எண்ணிப் பார்க்கிறது.. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?.Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?.பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?.தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய […]
வெள்ளியங்கிரி மலையேற பிப்., 1 முதல் பக்தர்களுக்கு அனுமதி
தென் கயிலாயம் என்று போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மலையேற, பிப்ரவரி 1 முதல் மே 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி என்று வனத்துறை அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,55,000-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடக்கம்
சென்னை மாநகரில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது. முதல்வர் ஸ்டாலின், தமிழக சுற்றுலாவை மேம்படுத்த ரூ.1.89 கோடியில் வாங்கப்பட்ட டபுள் டக்கர் பேருந்துகள் கடந்த 12ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். இந்த பேருந்துகள் இனி தினசரி பயணத்திற்கும், சுற்றுலா பயணத்திற்கும் பயன்படுத்தப்படும். டபுள் டக்கர் பேருந்தில் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.150 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜனவரி 24) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, சனிக்கிழமை (ஜன. 24) […]
உலக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மோடி: கே.பி.முனுசாமி புகழாரம்
மதுராந்தகம் தே.ஜ.கூ பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, “2014இல் பிரதமராக பொறுப்பேற்று பின் தங்கிக் கிடந்த இந்திய துணைக் கண்டத்தை இன்று உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய தலைவர் பிரதமர் மோடி; உலக பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்து தீர்வு கூறக்கூடிய தலைவராக அவர் இருக்கிறார்”என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது. எந்த […]