தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 40 வது வார்டு கௌரிவாக்கம் மற்றும் 41 வது வார்டு ராஜகீழ்ப்பாக்கம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில்

தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் (இரும்புச்சத்து) துத்தநாக மாத்திரை பெட்டகம் வழங்கும் விழா நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் தொடங்கி வைத்து (ஓ.ஆர்.எஸ்) கரைசல் அதன் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறை குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஜோசப்சேவியர் மற்றும் அரசு மருத்துவர், […]
தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வார்டுகள் புறக்கணிப்பு புகார்

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் திட்டமிட்டே பணிகள் புறக்கணிப்பதாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் குற்றச்சாட்டு. தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு தாம்பரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கழக செயலாளர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இன்று செங்கல்பட்டு […]
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குப்பட்ட சிட்லபாக்கம் ஏரியினை

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா மாநகராட்சி அலுவலர்கள், நீர்வளத்துறைஅலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
கட்டிட அனுமதிக்கு லஞ்சம் தாம்பரம் மாநகராட்சி ஆய்வாளர் கைது

கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி கட்டிட வரைபட திட்ட ஆய்வாளர் கைது. தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள நகர அமைப்பு பிரிவில் கட்டிட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்து வந்தது.இந்நிலையில் புரோக்கர் ஒருவர் மூலம் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கேட்டதாக மவுண்ட் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கர் தலைமையிலான சிறப்பு குழுவினர் குரோம்பேட்டை, சிஎல்சி ஒர்க்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை […]
தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்

மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலையோர வியாபாரம் மேற்கொள்வது குறித்த கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை நான்கு தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டும் கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் என் பிள்ளைக்கு நடந்தது போல் வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த பெற்றோர் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு, திருமலை நகர் 5வது தெருவில் வசிக்கும் […]
பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்துல் கலாம் நற்பணிமன்றம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தாம்பரம் மாநகராட்சி காந்தி நகரில் அப்துல் கலாம் நற்பணி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி 26 வது வார்டில் காந்தி நகர் A P J அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர் குலசேகரன் ஏற்பாட்டில் 80 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,ஜாமெண்டரி பாக்ஸ், புத்தக பை போன்ற பொருட்கள் காந்திஜி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக 26 ஆவது வார்டு மதிமுக மாமன்ற மாமன்ற உறுப்பினர் […]
டென்மார்க் நாட்டில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் சிட்லபாக்கம் சி.ஜெகன் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றி நேரில் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சியில் தற்போது வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அதனை ஒழுங்கு படுத்துகிறார்கள். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், அதிக குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு வீட்டுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து குப்பைகளை தரம் பிரித்து அள்ளிச் செல்கிறார்கள். இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் நாட்டில் உள்ள கென்டாப்ட் […]
செம்பாக்கத்தில் தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் மண்டலகுழு தலைவர் ஜெய பிரதீப் சந்திரன் தேர்தல் களப்பணியில் கட்சி நிர்வாகிகளுடன் பணியாற்றிய போது எடுத்த படம்