தென் மாவட்டங்களுக்கான வெள்ள நிவாரணத்தை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகை ரூ10,000 ஆக உயர்வு
நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது
வரலாறு காணாத மழையால் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடுமுறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்துள்ளனர். அதிகாரிகள் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை தொடங்கவும் உத்தரவு அளித்துள்ளது. இந்தநிலையில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர். பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடுமுறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மின்சாரம், குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை […]
வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு திருச்செந்தூர் கோயிலில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லை அழைத்து வரப்பட்ட பக்தர்கள் நெல்லையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பக்தர்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன
மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன-கார்த்திகேயன், நெல்லை ஆட்சியர்.
நெல்லையில் சீரானது ரயில் போக்குவரத்து

மழை வெள்ள பாதிப்பால் தடைபட்ட ரயில் போக்குவரத்து 3 நாட்களுக்கு பின்பு தொடக்கம். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது. சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி வழியாக சென்றது. கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலும் நெல்லை வழியே சென்றது. திருநெல்வேலி ரயில் நிலையம் வழியாக பெங்களூர்- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் சென்றது.
நெல்லையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் 18 பைபர் படகுகள் ஈடுபட்டுள்ளன
மேலும் 30 படகுகள் வரவழைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்
தொடர் கனமழை காரணமாக வந்தே பாரத் ரயில் சேவை ரத்து

நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து விடாமல் பெய்து வரும் கனமழையால் நெல்லை ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது
தொடர் கனமழை காரணமாக நெல்லை – தென்காசி இடையேயான பேருந்து சேவை நிறுத்தம்!
சுற்றுலா பகுதியில் குளிக்கத் தடை

நெல்லையில் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் குளிக்கத் தடை; பார்வையிட மட்டுமே அனுமதி
நெல்லைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வருகை!

இன்று முதல் 3 நாட்கள் ரஜினிகாந்தின் படப்பிடிப்பு பணகுடியில் நடைபெற உள்ளது. பணகுடி அருகே மங்கம்மாள்புரத்தில் உள்ள தனியார் ஒடு கம்பெனியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என தகவல்?