தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?: ஐகோர்ட் கிளை கேள்வி

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் விளங்கி வருகிறது.

அந்தவகையில் நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட்டில் 146 ஏக்கரில் ரூ.1,260 கோடி முதலீட்டில் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் விக்ரம் சோலார் நிறுவனம் விண்ணப்பித்தாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஜிகா வாட் சோலார் மற்றும் பிவி சோலார் மாட்யூல் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி […]
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் சோலார் மாடியூல் மற்றும் சோலார் செல் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்.

சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம். 1260 கோடி முதலீட்டில்146 ஏக்கரில் அமையவுள்ள தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது

தற்போது வரை அரசின் Seismo இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரபெறவில்லை. இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்களிடையே பீதி நிலவுகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வெட்ட வெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்

தீபக் ராஜாவை வெட்டிக் கொன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடி தீபக் ராஜா உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற உள்ளனர்.
நெல்லையில் ரவுடி தீபக் ராஜா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்..

“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்”

பாளையங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு

மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படும் நெல்லை மாமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமையில் வெளியூர் அழைத்து செல்லப்படும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம் வெளியூர் பயணத்தில் இணைந்துள்ளனர் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள்
நெல்லை மேயருக்கு எதிராக ஆலோசனை

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நாளை நடைபெற உள்ளது; ரகசிய இடங்களுக்கு 3 பிரிவுகளாக பிரிந்து சென்ற மாமன்ற உறுப்பினர்கள் ரகசிய ஆலோசனை;