திருநீர் மலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த இருசக்கர வாகனம்

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனம் தீபற்றி எரிந்து நாசம் தாம்பரத்தில் இருந்து சென்னை பல்சர் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருநீர்மலை சிக்னலை கடந்து செல்லும்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிய நபர் இருசக்கர வாகனத்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு இறங்கி நின்றார். அதே நேரத்தில் இருசக்கர வாகனம் தீபற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம் பக்கம் தண்ணீர் ஏதும் கிடைக்காத நிலையில் […]

படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

சென்னை அடுத்த படூர் பகுதியில் ராட்சத எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபிக்கடை எரிந்து 5 லட்சம் பொருட்கள் நாசம். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், படூர், திருப்போரூர் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதியில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் எரிவாயு குழய்களை பதித்து வீடுகளுக்கு நேரடி எரிவாயு இனைப்பு வழங்கி வருகிறது. இதனால் ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறங்களிலும் ராட்சத எரிவாயு குழாய் பதித்துள்ள நிலையில் படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து எரிவாயு […]

வல்லக்கோட்டை அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ

ஓடும் பேருந்தில் தீ கொழுந்துவிட்டு எர்ந்து வருகிறது. வல்லக்கோட்டை முருகன் கோவில் அருகே, தனியார் நிறுவன ஏசி பேருந்து ஓடும்போதே தீபற்றியது. உடனடியாக நிறுவன ஊழியர்கள் கீழே இறக்கபட்டனர். தற்போது அந்த பேருந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது….

சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்த அரசு பஸ் எரிவாயுவில் இயங்கும் என்ஜினில் திடீர் புகை

சென்னை அடையாறு எல்.பி சாலையில் திடீரென தீ பிடித்து எறிந்த MTC பேருந்து! ஓட்டுனரின் எச்சரிக்கையால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு CNG கேஸ் பொருத்தப்பட்ட எம்.டி.சி பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தபட்டது. இந்நிலையில் இன்று சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி நோக்கி வழக்கமாக புறப்பட்ட இந்த (102) பேருந்து மூன்று மணி அளவில் அடையாறு பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருக்கையில் ஓட்டுனருக்கு அருகாமையில் உள்ள இன்ஜின் பகுதியில் […]

பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம் வெடிமருந்து கலவையின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் சோமசுந்தரம் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிபடை அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் பரோஸ்கான் தகவல்

சேலையூரில் பயங்கர தீ விபத்து பிரியாணி கடை, பட்டாசு கடை எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த சேலையூரில் பேக்கரி, பிரியாணி கடை உள்ளிட்ட அடுத்து அடுத்து 5 கடைகளில் பயங்கர தீவிபத்து, பதுக்கிய பட்டாசு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் காவல் நிலையம் அருகே ஹைதராபாத் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர்கடையில் இன்று ஏற்பட்ட தீ அடுத்துள்ள ஆரோக்கியா பேக்கரி, பர்னிச்சர் கடை, டீக்கடை, பெட் தயாரிக்கும் கடை என அடுத்து அடுத்து தீ […]

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: சிறுவன் கையில் பற்றிய தீ

சென்னை, நீலாங்கரையில், நடிகர் மற்றும் தவெகா தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாகச நிகழ்ச்சியில், சிறுவனின் கையில் தீ பற்றி விபரீதம் நேரிட்டுள்ளது. நீலாங்கரையில் தவெகா மாவட்ட த் தலைவர் சரவணன் தலைமையில், விஜய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, தீ எரிந்தபடி, அந்த சிறுவன் கையால் ஓடு உடைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. மேடையில், ஓடுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், […]

தீ விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.12 லட்சம் இழப்பீடு: குவைத் அரசு அறிவிப்பு

குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12 ம்தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் இழப்பீடு வழங்க குவைத் மன்னர் ஷேக் மேஷால் அல் அகமது அல் ஜபேர் அல் சபா உத்தரவிட்டுள்ளார். இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே தீ விபத்து

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எதிரில் பழைய பொருள்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து, கரும்புகை எழுந்ததால் சுற்றுவட்டத்தில் புகைமூட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், வயர்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள் போன்ற பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீடீரென தீபற்றி எரிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு துறைக்கு […]

அகரம் தென் பகுதியில் பயங்கர தீ விபத்து கடைகள் எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலை மப்பேடு சந்திப்பு நான்கு இரண்டு கடைகள் அதிகாலை 1 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. மேடவாக்கம், சிறுச்சேரி உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயனைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரண்டு ஜெ சி பி வாகனங்கள் கட்ட பக்கவாட்டு பகுதிகளை உடைத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முதல் தகவலாக பேக்கரி மற்றும் ஹார்டுவேர் கடைகள் முழுவதும் எரிந்து நாசம் ஹார்டுவேர் […]