சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவிப்பு. இந்த டிக்கெட் விலை ₹150 என நிர்ணயம்.
தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா அணி

அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால், குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2 இடம்பிடித்தது. இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. அமெரிக்க அணி தேர்வு பெற்றதால் பரிதாபமாக டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்.
இந்திய கால்பந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து நியமிக்கப்பட்டார். இன்று இரவு 9 மணிக்கு தோஹாவில் நடைபெறும் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த கத்தாரை எதிர்கொள்கிறது இந்தியா.
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள் பதிவு. கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில் போலி விண்ணப்பங்களால் சர்ச்சை. மோடி, அமித்ஷா மட்டுமின்றி சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் பெயர்களிலும் போலியாக விண்ணப்பம் பதிவு. மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கோப்பை கொண்டாட்டங்களாலும் ஆக்ரோஷத்தாலும் வெல்லப்படுவதில்லை

வெறும் சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது; ஐபிஎல் கோப்பையை வெல்ல நீங்கள் பிளேஆஃப்களிலும் நன்றாக விளையாட வேண்டும்: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பாதி ராயுடு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

போட்டிக்கான டிக்கெட்டை கட்டாயம் காண்பிக்கவும் மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
இந்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு பிசிசிஐ-யை வலியுறுத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. இங்கிலாந்து நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை 5 விக்கெட்டுகளை இழந்து கடந்தது
தேசிய விளையாட்டு விருதுகள்
முகமது ஷமிக்கு (கிரிக்கெட்) 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக அர்ஜுனா விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
வெறும் 43 பந்தில் 193 ரன்கள்: டி10 கிரிக்கெட்டில் இமாலய சாதனை

பார்சிலோனா: ஐரோப்பியன் கிரிக்கெட் ‘டி10’ தொடரில் ஹம்சா சலீம் தார் என்பவர் வெறும் 43 பந்துகளில் 193 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனாவில் ஐரோப்பியன் கிரிக்கெட் டி10 தொடர் நடக்கிறது. அதில் கடந்த டிச.,5ம் தேதி கேடலுன்யா ஜாகுவார் (சி.ஜே.ஜி) அணியும், சோஹல் ஹாஸ்பிடல்டெட் (எஸ்.ஓ.எச்) அணியும் மோதின. 10 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேடலுன்யா அணிக்கு ஹம்சா சலீம் தார் மற்றும் யாசிர் அலி ஆகியோர் துவக்கம் தந்தனர். […]