காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

காவிரி நீர் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்

ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம் – அமைச்சர் துரைமுருகன்.