பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதன்பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:- எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வில் இணைந்தார் அன்வர் ராஜா

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைத்து உள்ளார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் தி.மு.க.வில் இணைந்தா

பாஜகவுக்கு பெண் தலைவர்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நட்டா உள்ளார் .அவரது பதவி காலம் முடிந்து புதிய தலைவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால் கடும் போட்டி இருப்பதை தொடர்ந்து பெண் ஒருவரை தலைவராக்க ஆர்எஸ்எஸ் இயக்கம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வானதி சீனிவாசன் புரந்தேஸ்வரி ஆகிய மூவரில் ஒருவர் தலைவர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.பாஜகவுக்கு பெண் ஒருவர் தலைவரானால் அது புதிய சாதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது

விஜய் கட்சி பாஜக அணியில் சேர்ப்பா? அமித்ஷா பதில்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பா.ஜ.க கூட்டணியில் சேர்வாரா என்று மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன அப்போதுதான் இது பற்றி தெளிவாக தெரியும். கட்சியில் நடிகர்களை சேர்ப்பது குறித்து உள்ளூர் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியில் எடப்பாடி தான் முதல்வர் – நைனார் நாகேந்திரன் உறுதி

திருவாரூரில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை ஏற்படும். எடப்பாடி முதலமைச்சர் ஆக இருப்பார் என்று தெரிவித்தார்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் -அமித்ஷா உறுதி

மதுரையில் நடந்த பாஜக மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது 2025 ம்ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்தோம். டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை முடித்து, 27 ஆண்டுக்கு பிறகுெல்லியில் பா.ஜ.க, ஆட்சி அமைத்து உள்ளது. 2025 ல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ, 2026ல் தமிழ்நாட்டி ஆட்சி அமைப்போம். 2026 ல் நடக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை […]

2026 -ல் பா.ஜ.க கூட்டணி ஆட்சி – அமித் ஷா உறுதி

மதுரையில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கூறியதாவது2024-ல் ஒடிசாவில் பாஜக முழு பலத்தோடு ஆட்சி அமைத்தது. ஹரியானாவைவிலும் பாஜக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. 2025-ல் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அகற்றப்பட்டு, 27 ஆண்டுக்குப்பின் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. டெல்லியில் பாஜக அமைந்ததுபோல், 2026-ல் தமிழகம், மேற்குவங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரப்போகிறது. என்றார் அமித் ஷா

.பாஜகவில் இருந்து அழைப்பு வரவில்லை: ராமதாஸ்

அன்புமணியுடன் முரண்பாடு இல்லை என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு வழியாக பாமகவில் தந்தை – மகனிடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும் இனி அனைத்தும் நல்லவையாக நடக்கட்டும் என்றார். மேலும், கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும், பாஜகவில் இருந்து அழைப்பு வரவில்லை என்றும் கூறினார்.

ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கும் பிரதமர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும்.புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி […]

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த பாஜக, பாமக வலியுறுத்துமா? சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு