நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணியில் இருந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரம் முன்பே திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களும் மூடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.15 மணியளவில் மூடப்படும். நாளைமறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோவிலின் நடை திறந்து தூய்மைப்பணி, புண்யவசனம் நடத்தப்படுகிறது. காலை 8 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.