செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு லட்சம் வாக்காளர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மொத்தமுள்ள 27,87,362 வாக்காளர்களில் 7,01,901 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை 20,85,464 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 25.18% ஆகும்.
தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு…

கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியில் 10 சதவிகித வாக்குகளை இழந்துவிட்டோம். அதை மீட்டெடுக்க வேண்டும்.
திமுகவுக்கு 6 சதவீதம் ஓட்டு குறைவு!

அண்ணா அறிவாலயத்தில் விசாரணை தொடங்கியது
வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவர்-சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுவர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன காலை 8 மணிக்கு தபால் வாக்கு, 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும் – தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றிய போது எடுத்த படம்
செம்பாக்கம் வடக்கு பகுதியில் பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுவதை செம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் ஆய்வு செய்தனர்

அருகில் சரண்யா மதுரைவீரன் எம்.சி, வட்ட செயலாளர் க.ரமேஷ், உடன் இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி, மாணவரணி கலந்து கொண்டனர்.
மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றிய போது எடுத்த படம்
தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்
அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52% சதவீதம் பதிவு
குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.04% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.