இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்
2024 டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவும் நேற்று ஓய்வு பெற்றார்.இதுபோல 4 வீரர்கள் ஓய்வு பெற்றதால், அவர்கள் இடத்தை பிசிசிஐ எப்படி நிரப்பப் போகிறது என கேள்வி எழுந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார்.123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 9,230 ரன்களை விளாசியுள்ளார். அதில், 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். 7 முறை இரட்டை சதங்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். இவர் கேப்டன் ஆக இருந்த போது இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.