டிவிட்டருக்கு ரூ.2.89 கோடி அபராதம்

அமெரிக்கா, கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் பற்றிய டிவிட்டர் பதிவுகளை வழங்க அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அந்நிறுவனம் நீதிமன்றம் கேட்ட தகவல்களை வழங்க தாமதம் செய்து வந்த நிலையில், ரூ.3.5 லட்சம் டாலர் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடியாகும்.

டுவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது- எலான் மஸ்க்

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. […]