மரகன்று

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 2ஆவது குறுக்கு தெருவில் தாம்பரம் மாநகராட்சி 36ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், சந்திரன் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து மரகன்றுகளை நட்டனர். மாமன்ற உறுப்பினர் கூறுகையில் யார் வீட்டிலும் மரக் கழிவுகள் சாலையில் போடாமல் வீட்டிலேயே இருந்தால் உறுப்பினரை தொடர்பு கொண்டு அதை அகற்ற எற்பாடு செய்யப்படும். சாலையில் வீசப்படும் மரக்கழிவுகளுக்கு இனி மாநகராட்சி அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.

சிட்லப்பாக்கத்தில் மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் வார்டு 43ல் பகுதியில் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆகியோரின் சொந்த முயற்சியில் முதல் முறையாக மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வார்டு முழுவதும் மின் கம்பிகளில் உரசி கொண்டிருந்த மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஆங்காங்கே போடப்பட்டிருந்ததை ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்தையும் அரைத்து உரமாக்குவதற்கு ஏற்பாடு தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது.இவ்வாறான மரக்கிளைகளை பெரும்பாலான சூழ்நிலையில் அப்படியே […]