சென்னை, தியாகராய நகரில், கவியரசு கண்ணதாசன் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில்,

அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன்தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தி.நகரில் மிகப்பெரிய பாலம்; 5 நிமிடமாக குறையும் பயண தூரம்

சென்னை, தி.நகரில் கூட்ட நெரிசலை சமாளிக்க மிக நீளமான பாலம் 2024ல் கட்டப்பட உள்ளது. ஹைப்ரிட் மேம்பாலமாக அமையவுள்ள இந்த பாலம், அண்ணா சாலையை நேரடியாக சிஐடி நகர் வழியாக மகாலிங்கபுரத்துடன் இணைக்கும். இதனால் இதற்கு இடைப்பட்ட தூரத்தை கடக்க 30 நிமிடங்கள் ஆகும் நிலையில், மேம்பாலம் கட்டிய பின் 5 நிமிடங்களில் திநகர் டிராபிக்கை கடக்கலாம்.