TASMAC முறைகேடு – ஆகாஷ் பாஸ்கரனுக்கு உத்தரவு
டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில், இந்த விவகாரம் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது
வரும் 5ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை!
வரும் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் மதுபாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்’ – திருமாவளவன்

அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிறபோது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும். அனைத்துக் கட்சிகளும் மது, போதைப்பொருள் வேண்டாம் என்ற கருத்தில் உடன்படுகின்றன. கட்சிகள் உடன்பட்டாலும் நாடு முழுவதும் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன; மது ஆலைகள் இயங்குகின்றன. எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை எனும்போது மதுக்கடைகள் ஏன் திறந்திருக்கின்றன? ‘மதுவை ஒழிப்போம் மனிதவளம் காப்போம்’ என தான் பேசிய வீடியோவை X தளத்தில் பகிர்ந்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு – எல்.முருகன் கருத்து!

“திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்”. “திருமாவளவனுக்கு எதாவது கோரிக்கை இருக்கலாம்”. “மது ஒழிப்பு மாநாட்டை மிரட்டுவதற்காக யுக்தியாக பார்க்கிறேன்”. “திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல”.
டாஸ்மாக் மதுவில் தரமும் இல்லை, போதையும் போதவில்லை: அண்ணாமலை

டாஸ்மாக் மதுவில் தரம் இல்லை, போதை போதவில்லை என்று தான் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு இளைஞர்கள் செல்கின்றனர் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பா.ஜ.க-வின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலை நீலாம்பூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் பா.ஜ.க […]
மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம்- டாஸ்மாக் பதில்

“மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் 306.32 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது” காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு ரூ.297.12 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது – டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
ஏப்.17 முதல் ஏப்.19 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..!
தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு
மது விற்பனை நல்லது என நினைத்தால் பாஜக அலுவலகத்தில் வைத்து விற்கலாம் – அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி தலைவர்