அம்மன் கோவிலில் கிடா வெட்டி பிரார்த்தனை நிறைவேற்றிய முஸ்லிம் தம்பதி

பிரார்த்தனை நிறைவேறியதால் முஸ்லிம் தம்பதியர் தஞ்சையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டி, பூஜை செய்து 200-க்கும் மேற் பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

திமுக எம்எல்ஏவுக்கு ஜோதிமணி எம்பி எச்சரிக்கை

மதுரை திமுக எம்எல்ஏ கோ.தளபதி காங்கிரஸ் கட்சியையும், கரூர் எம்.பி. ஜோதிமணியையும் விமர்சித்துப் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து எம்.பி. ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது: திமுக எம்எல்ஏ கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள். நான் கரூரில் இருக்கிறேன்.எங்களைத் தொடர்ந்து தாக்கிப் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறினார்.

சென்னையில் எடப்பாடி பிரச்சாரம் செய்ய அதிமுகவினர் தயக்கம்

அதிமுக பாஜக கூட்டணியில் சென்னை நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் எடப்பாடி பிரச்சாரம் செய்ய நாம் ஏன் செலவு செய்ய வேண்டும் என்ற தயக்கத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் சிக்கலில் ’ஜனநாயகன்’ – தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது. பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் […]

போலீஸ் என்கவுண்டர் ரவுடி சுட்டு கொலை

பெரம்பலூர் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கொட்டு ராஜா என்கிற அழகுராஜா என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டர். முன்னதாக, கடந்த 24-ம் தேதி பெரம்​பலூரில் போலீ​ஸ் வேனில் அழைத்​துச் சென்ற பிரபல ரவுடி வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​ற சம்பவத்தில் கொட்டு ராஜா முயற்சித்திருந்தார்அவரை போலீசார் கைது செய்து ஆயுதங்கள் இருந்த இடத்துக்கு கொண்டு சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பும் என்றார் அப்போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்தது.

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.387-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“மங்காத்தா” அலையால்… – மோகன் ஜி வேதனை

திரௌபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் படம் பார்க்காமல் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். திரைப்படத் துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் […]

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு: வீட்டு வாசலுக்கு வரும் 33 கேள்விகள்!

2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது. குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் 33 கேள்விகளை கேட்கவுள்ளனர். குடிமக்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளா், அதன் பயன்பாடு, வீட்டின் தரை மற்றும் சுவா் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வீட்டின் தலைமையாளரின் பாலினம், கட்டடத்தின் எண், மக்கள்தொகை வீட்டு எண், வீட்டின் உரிமையாளா் பட்டியலின அல்லது பழங்குடியின அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்பதை கேட்டறிவார்கள். சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு, வீட்டின் […]

நிலைமை மோசமாகும் முன் உடனடியாக கைவிட பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவசரமான மற்றும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என சாடியுள்ளார். நீட் தேர்வு எனும் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் […]