கிழக்கு தாம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு வசதியாக அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் விளம்பர தட்டிகள் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் என்ற உதவியுடன் இடித்து அகற்றினர்.பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டிகளையும் அகற்றி எடுத்துச் சென்றனர் இவற்றை அகற்றுவதற்கு அவகாசம் கொடுக்காமல் மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததால் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

தாம்பரத்தில் சாலையோரம் படுத்து தூங்கியவர் மீது கார் மோதி படுகாயம்.

தாம்பரம் மேம்பாலம் மீது சாலையோரம் படுத்து தூங்கியவர் மீது கார் மோதி விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி இந்த ஒளிப்பதிவு செய்த நபர் மனிதாபம் இன்றி ஒளிப்பதிவு செய்ததில் அக்கரை காட்டியதாக சமுக வளைத்தளத்தில் பார்த்தவர்கள் பதிவிட்டுள்ளனர் சென்னை தாம்பரம் மேம்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் மேம்பாலத்தின் சென்டர் மீடியம் மற்றும் சாலை ஓரம் ஏராளமானவர்கள் படுத்து உறங்குகின்றனர், நிலையில் நேற்று நள்ளிரவில் வியாசர்பாடியை சேர்ந்த ரமணா(வயது-63) என்பவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தாம்பரம் நோக்கி […]

தாம்பரம் பாரதமாதா தெருவில், தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் பள்ளி நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.

தாம்பரம் பாரதமாதா தெருவில், தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் பள்ளி நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.மறைந்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதி ஏழை மாணவர்களுக்காக உருவாக்கிய பள்ளி, இது. பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுகவினரின் வார்டுகள் புறக்கணிப்பா?

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வாடு உறுப்பினர்களின் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி கழக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர் தாம்பரம் மாநகராட்சியில் போதிய பொறியாளர்கள் இல்லாததால் பணிகள் மந்தமாக நடப்பதாக மாமன்ற கூட்டத்தில் ஆணையர் ஒப்புதல். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி முழுவதும் இப்ப பிரச்சனை தலை விரித்து ஆடுவதாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதனால் பொதுமக்கள் கடும் […]

தாம்பரத்தில் கிணற்றில் தூர்வாரிய கூலி தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கம்

தாம்பரம் மேற்கு பகுதி கிஷ்கிந்தா சாலையை சேர்ந்தவர் மணியன்இவர் வீட்டில் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தூர்வார சங்கர்(54) என்பவர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர், அப்போது சங்கர் தீடீரென விஷவாயு தாக்கி கிணற்றில் மயங்கி விழுந்தார், தகவல் அறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் பழனியாண்டி தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் முதலில் விஷவாயுவை அகற்றிய பின்னர் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி சங்கரை உயிருடன் மீட்டனர், மேலும் அவரை மயக்கம் தெளியவைத்து […]

குரோம்பேட்டை அருகே பேருந்தில் சென்ற பெண் இடம் இருந்து 14 சவரன் தங்க நகை மாயம்

தாம்பரம் குரோம்பேட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சனா தேவி வயது 68 இவர் அசோக் நகரில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதற்காக குரோம்பேட்டையில் இருந்து 66 ஏ என்ற பேருந்தில் ஏறி அஸ்தினாபுரம் சென்றுள்ளார் அங்கு உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்ற பின் தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார் அப்போது பையில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமாகியுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் […]