வருவாய் அலுவலர்கள் போராட்டத்தால் தாம்பரம் பொதுமக்கள் பாதிப்பு

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 நாட்களாக தொடர் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற வந்த பொதுமக்கள் பதிப்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 நாட்களாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பணி புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு தரப்பில் அரசு சான்றிதழ் பெறவந்த பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தாம்பரம் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் திரை

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் மின்னணு சுவர்திரை, அரசின் திட்டங்களை அறிந்துகொள்ள அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர். தாம்பரம் மாநகராட்சி ஜி.எஸ்.டி சாலை பேரூந்து நிலையத்தில் செய்தி-மக்கள் தொடர்த் துறை அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்கள் அறிந்திடும் வகையில்புதிய மின்னணு சுவர்திரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற […]

மேற்கு தாம்பரம் காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

மேற்குதாம்பரம் கண்ணன் அவன்யூவில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் கருவரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கருகல்லில் அமைத்த நிலையில் இன்று திரு குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக இரண்டு நாட்களாக முன்றுகால யாகசாலை பூஜைகள் பூர்ணாதி நடைபெற்ற நிலையில் புனித கலசநீரை மேளம் தாளம் முழங்க கோயில் கோபுரத்திற்கு கொண்டு சென்று திரு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தாம்பரம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டதை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து கருகல்லால் ஆன கற்பகிருகத்தில் ஸ்ரீகாளிகாம்பாளுக்கு அபிஷேகம் […]

சூதாட்டத்தில் ரூபாய் 50 லட்சம் இழப்பு மகனை கொன்று மாட்டிக் கொண்ட தந்தை

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் விமானப்படை சமையற்கலைஞர் சைத்தான்யா(42), இவர் மனைவி வைதேகி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் சைத்தன்யா மெரினா கடற்கரையில் இருந்தவாறு அவரின் நண்பர் ஒருவருக்கு தன் முதல் மகன் பத்திரி(8) வீட்டில் அறையில் தூக்கிட்டு கொலை செய்ததாக செல்போன் மூலம் தகவல் அளித்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றார். மெரினாக காவல் துறையினர் நள்ளிரவில் சுற்றி திரிந்த சைத்தன்யாவை பிடித்து வைத்த நிலையில் நண்பர் […]

கிழக்கு தாம்பரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்குகள் கொண்ட முருகன் பல் பொருள்அங்காடி இயங்கி வந்தது. இந்த நிலையில் இரவு மூடும்போது இரண்டாம் தளத்தில் திடீரென தீபற்றியது. இதனால் உள்ளே பணியாட்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, மின்சாரவாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மேல் தளத்திற்கும் அதிகமாக […]

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி தாம்பரம் மேயர் தகவல்

தமிழக அரசு சிலப்ப விளையாட்டுக்கு கல்வி, உயர் கல்வியில் இடஒதுகீடு அறிவித்த நிலையில் மாணவர்களிடம் சிலம்பம் கற்கும் ஆவர்வம் அதிகரித்துள்ளது. அதுபோல் தாம்பரம் மாநகராட்சி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் மாணவ, மணவியர்கள் மாநில அளவிளான சிலம்ப போட்டியில் பங்குபெற்று யுவனேஷ், அகல்யா, சங்கர தனுஷ் ஆகிய மாணவர் முதல் பரிசும், அதுபோல் இரண்டாம் முன்றாம் இடம் என 14 மாணவர்கள் ஒரே போட்டியில் பரிசுகோப்பைகளை பெற்றுவந்தனர். அவர்களை மற்ற பள்ளிமாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் தாம்பரம் […]

செய்தியாளரை தாக்கிய உதவி ஆய்வாளரை காப்பாற்றும் தாம்பரம் காவல்துறை !

தமிழக காவல்துறை தலைவர் அவர்களிடம் புகார்..! சென்னை பள்ளிகரணை சாய் கணேஷ் நகரில் புயல் வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, மழை நீர் வடிந்த பிறகு வழங்கப்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கடந்த 7ம் தேதி பள்ளிகரணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இந்த தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் சாந்தகுமார் ச, என்பவரை பள்ளிகரணை உதவி ஆய்வாளர் அசோக சக்ரவர்த்தி என்பவர் எவ்வித காரணமுமின்றி யார் […]