நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்க- சென்னை உயர்நீதிமன்றம்

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் அரசு வழங்கும் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம். முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.