அண்ணா நினைவுநாளையொட்டி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

இதில் மண்டலக்குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா 1000 மேற்பட்டவர்கள் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் ராஜா அவர்களும் திருவடி காமராஜ் மண்டலகுரழு தலைவர் அவர்களும் பெருங்களத்தூர் எஸ் சேகர் பி எ அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்
தாம்பரத்தில் ஸ்டாலினுக்கு திமுக பிரம்மாண்ட வரவேற்பு

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட பேரூந்து முனையம் அமைக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி சாலை வழியாக சென்றார். தாம்பரத்தில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் தண்டே மேளம் முழங்க கருப்பு சிவப்பு பலுன்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மண்டலகுழு தலைதலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், ஊராட்சிமன்ற தலைவர்கள் ஜனனிசுரேஷ், வேல்முருகன், கவுன்சிலர்கள் ஜெகன், சுரேஷ், உள்ளிட்டவர்களும் முதலமைச்சருக்கு பூங்கொத்து, சால்வைகள், புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். […]
சிட்லபாக்கத்தில், கோமதி நகர், அம்பேத்கர் நகர், SBI காலனி, திருமுருகன் சாலை, ராமகிருஷ்ணாபுரம், ஆகிய நியாய விலைக் கடைகளில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.6000/- வழங்கப்பட்டு வருவதையும், நிவாரண உதவித் தொகை கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

உடன் மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன், சி.சுரேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ரோலர் ஸ்கேட்டிங்: ஆசிய சாதனை படைத்த சிட்லபாக்கம் மாணவிக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி நகரில் உள்ள சாகச நாயகி செல்வி.கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆசியா கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு அதிலும் சிட்லபாக்கத்திற்கு பெருமை சேர்த்த சாகச நாயகிக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் ராஜா அவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மண்டல குழு தலைவர் […]
நகர்ப்புற சாலை 2 கோடி 11 லட்சத்தில் திட்டத்தின் கீழ்3 வது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கத்தில் 36 ரோடு தார் சாலை புனரமைப்பு பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டு ராகவேந்திரா சாலையில் தார் சாலை புனரமைப்பு பணியை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு சாலை பணியினை துவக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரர்களை மழை காலத்திற்கு முன்பாக சாலை பணிகளை தரமாகவும் மாநகராட்சி வழிகாட்டுதலின் படி சரியான அளவீடுடனும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் செம்பாக்கம் […]
ஏரியை காப்போம்

தாம்பரம் மாநகரம், சிட்லபாக்கத்தில், (02/10/2023) காலை, Save Lakes (ஏரியை காப்போம்) சார்பில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை, தாம்பரம் மாநகர செயலாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R..ராஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், Chitlapakkam Rising நிர்வாகிகள், இ.மனோகரன், சி.சுரேஷ், இரா.விஜயகுமார், மலர்.மு.கருணா, சி.ஜெகன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், துரை.இரா.சிவகுமார், சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
பச்சமலையில் இருந்து சிட்லபாக்கம் ஏரிக்கு வரும் வரப்பு கால்வாய் 15 ஆண்டாக தூர்வாராமல் இருந்தது

இதனை தூர்வார வேண்டி டி.ஆர்பாலு எம்.பி., மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. ஆகியோரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் தூர் வாரும் பணிகளை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் 4வது மண்டல குழுத் தலைவர், டி.காமராஜ், மாநகராட்சி பொறியாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்ட செயலாளர் எம்.வினோத், மா.கன்னியப்பன், டாக்டர் பார்த்திபன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைதொகை 15ம் தேதி முதல் வழங்க காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கிவைக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராது, பல மாநிலங்களில் மெஜாரிட்டி இல்லை என்றால் மீண்டும் நாடு முழுவதும் தேர்தல் நடத்தவா முடியும், மோடி மீது ஓராயிரம் குற்றச்சாட்டுகள் சொல்லலாம் கூடுதல் செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் (பாரத் மண்டபம்) தண்ணீரால் நிறம்வழிகிறது டி.ஆர்.பாலு பேட்டி:- தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், யோகா மையம் ஆகியவற்றை இன்று டி.ஆர்.பாலு எம்.பி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து 49, […]
பெருங்களத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின்னர் 130 பள்ளி மாணவ மாணவிகள் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் , பெருங்களத்தூர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் […]