ஸ்ரீநகரில் போர் விமானங்கள் குவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், இந்தியா MiG-29 போர் விமானப்படையை நிலைநிறுத்தியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்குமுன் MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட MiG-29 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு – ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பிய வழியில், ஜம்மு – ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால், தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த 21 பேர் காஷ்மீரில் சிக்கித் தவிப்பு பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தங்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை