வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது நல்லது. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் […]

பங்குனி உத்திர விரதம் எப்படி இருப்பது?

தமிழர் பாரம்பரியத்தில் எண்ணற்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன.அந்த வரிசையில் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் கொண்டாடப்படுகின்ற விழாவே பங்குனி உத்திர விழாவாகும்.பங்குனி உத்திரம்தமிழ் மாதங்களில் 12-ஆம் மாதம் பங்குனியாகும் 12-ஆம் நட்சத்திரம் உத்திரம் ஆகும். இந்த இரண்டும் சேர்த்து வருகின்ற திருநாளே பங்குனி உத்திரம்.பன்னிருக்கை வேலவனுக்கு உகந்த நாளாக இந்நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆறுபடை வீடுகளிலும் விழா எடுத்து இந்நாளை கொண்டாடுகின்றனர்.பங்குனி உத்திர தெய்வ திருமணங்கள்பங்குனி […]

பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடுவது ஏன்-?

வீட்டின் பூஜை அறையில் தினமும் ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் நல்லது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.அதேப்போல் நாம் தினமும் பூஜை அறையில் அமர்ந்து இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரத்தை கூறி தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் சொல்லும் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். பிறகு அந்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அதேப்போல் தினமும் பூஜை அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் […]

மாங்கல்யம் அருளும் மகாசக்தி காத்யாயனி…!

குன்றத்தூர் முருகன் கோவில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் உள்ளது. கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது.காத் என்றால் திருமணம் அயணம் என்றால் ஆறுமாதம்.குடும்ப பிரச்னை, உறவினர்களால் பிரச்னை,பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து திருமணம் கைகூட இந்த அம்பிகையின் சன்னதியில் வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் ஒரு நாளை எடுத்துக்கொண்டு மூன்று […]

மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?

மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர் லலிதா சகஸ்ரநாமம், சவுந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள். அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார். பாட்டி அம்பாளிடம், “ அம்மா! உனக்கேது தங்க காசுமாலை… காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார், என்று கேட்டார். அதற்குப் பெரியவர்,“நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் […]

ருத்ராட்சத்தின் பலன்கள்

ருத்ராட்ச முகங்களும் அதன் பலன்களும்.ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி […]

வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று சத்திய நாராயண பூஜை செய்து வந்தால் செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமி வழிபட வேண்டும். நமது உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என சாஸ்திரம் சொல்கிறது. எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது மகாலட்சுமி முகத்தில் விழிப்பதற்கு சமம்.அதேபோல […]

முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.வருவாய் அதிகரிக்க வேண்டு மானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், […]

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும்

சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள், அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். வழிபாடு முடிந்தவுடன் தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட வேண்டும்.சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து நீங்க அன்றைய நாளில் கோவிலுக்கு […]

இந்திராணி

இந்திரனின் அம்சமான இத்தேவி அம்பிகையின் தனஸ்தானத்திலிருந்து தோன்றியவள். இத்தேவி மகேந்திரி, ஐந்திரி என்று போற்றப்படுகிறாள்.பொன்னிற மேனியளான இவ்வம்மை யானையைக் கொடியாகவும், வாகனமாகவும் உடையவள். இத்தேவி பின்னிரு கரங்களில் சக்தி ஆயுதமும், வஞ்சிராயுதமும் கொண்டும், முன்னிரு கைகளில் அபயவரத முத்திரை காட்டியும் அருள்புரிகிறாள்.இரத்தின கிரீடம் தரித்த இவ்வம்மையை வழிபட உயர்ந்த பதவிகள், அரச சம்பத்துக்கள், சொத்து சுகம், நல்ல வாழ்க்கைத்துணை ஆகியவற்றை அருளுவாள்.