செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியில் சரவணா நகர் பூங்காவில் 2245 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மரக்கன்று எடுத்துக் கொடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ராஜலட்சுமி, மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன்* செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன்* மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 250 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு நிதி பங்களிப்புடன் 39,40, 41,42 ஆகிய வார்டு பகுதிகளில் சிமெண்ட் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது

திருமலை நகர் 2வது பிரதான சாலையில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் பூமி பூஜையுடன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அதிகாரிகள் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன் மற்றும் ஒப்பந்ததாரர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் சரியான அளவீட்டுடன் தரமுடன் சாலை பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மண்டலக்குழு தலைவர் கோரிக்கை விடுத்தார்.
செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட திருமலை நகர் 39 வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நரேந்திர குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரகுபதி ஜெயபிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள கால்வாய் பணிகளை பருவமழைக்கு முன்னதாக நேரத்தில் முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட 39 வது வார்டு திருமலை நகர் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பகுதியில் கட்டன் கால்வாய் அமைக்கும் பணியினை செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன்ஆய்வு செய்தார்

மழைக்காலத்திற்கு முன்பாக கால்வாய் பணிகளை முழுமையாக முடித்து பொது மக்களுக்கு சிரமம் ஏதும் இல்லாதவாறு எதிர்வரும் மழைக் காலங்களில் பணியினை செய்துமுடித்திட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் தின நன்னாளில் செம்பாக்கம் மண்டலகுழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன்

செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அரசு நகர்புற நல வாழ்வு மையத்துக்கு நேரடியாக சென்று மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து சால்வை அணிவித்து மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 40 வது வார்டு கௌரிவாக்கம் மற்றும் 41 வது வார்டு ராஜகீழ்ப்பாக்கம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தில்

தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் (இரும்புச்சத்து) துத்தநாக மாத்திரை பெட்டகம் வழங்கும் விழா நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் தொடங்கி வைத்து (ஓ.ஆர்.எஸ்) கரைசல் அதன் பயன்பாடு மற்றும் உபயோகிக்கும் முறை குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஜோசப்சேவியர் மற்றும் அரசு மருத்துவர், […]
செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 39 வது வார்டு திருமலை நகர் பிரதான சாலையில் கட்டன் கால்வாய் அமைக்கும் பணியினை செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளருடன் கலந்துரையாடிய செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு முழுமையாக கால்வாய் பணியினை போர்க்கால அடிப்படையில் முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
செம்பாக்கம் மண்டலத்தில் ஜெயேந்திர நகர் மற்றும் நன்மங்கலம் இணைப்பு சாலை பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் வீசி சென்ற குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடந்தன

39வது வார்டு திருமலை நகர் பகுதியில் எக்ஸ்னோரோ தொண்டு நிறுவன அமைப்பு மற்றும் ஜெயேந்திர நகர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார ஆய்வாளர் துணையுடன் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மேற்பார்வையில் குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் குப்பைகள் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுப்பதாக ஜெயேந்திர நல சங்க குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் நமது மாநகரம் தூய்மை நகரம் நமது பொறுப்பு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, நீர் நிலைகளை […]
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை வைத்ததன் பேரில், 16 கோடி ரூபாய் அரசு நிதியில் செம்பாக்கம் ஏரியின் தூய்மைபணி மற்றும் 8 எம் எல் டி அளவிற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது

இதனையொட்டி சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அதுல் மிஷ்ரா , வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் உஷா காகர்லா , தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனா மற்றும் அதிகாரிகள், நேரில் வந்து செம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது 43வது மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், குடியிருப்போர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஸ்ரீ சர்வமங்களா நகர் சங்க நிர்வாகிகள், சிட்லபாக்கம் ரெய்சிங் உட்பட பலர் கலந்து கொண்டதில் […]
செம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

செம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் 101-வது பிறந்த நாளை ஒட்டி செம்பாக்கம் வடக்கு பகுதி தெற்கு பகுதி சார்பாக செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், சிட்லபாக்கம் மனோகரன், பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.