கார்கில் போர் வெற்றியின் 25 வது ஆண்டு விழா அஸ்தினாபுரம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது

இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கார்த்திக் கண்ணன், முன்னிலை வசித்தார். மக்கள் இயக்க நிர்வாகி வெங்கட்ராமன் மூ.கு.கிருஷ்ணமூர்த்தி, தேவராஜன், சினிமா துணை இயக்குநர். மற்றும் முனுசாமி வரதன் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் போர்வீரர் நினைவு ஸ்தூபிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும்.

கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளர் […]