3 நாட்களுக்கு இலவச டேட்டா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB மொபைல் டேட்டா, Unlimited Calls, 100 SMS இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு. Postpaid வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு.
ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது ஏர்டெல் நிறுவனம்

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு. ஜூலை 3ம் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 10% முதல் 20% வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஏர்டெல்.
ஜியோ கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி ஜியோ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ▪️. அதன்படி, ₹155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ₹189ஆகவும், ▪️. 28 நாள்களுக்கு ₹299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ₹349ஆகவும், ▪️. ₹399 என்ற மாதாந்திரக் கட்டணம் ₹449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ▪️. இந்த புதிய கட்டண உயர்வு ,ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.