பாம்பன் புதிய ரயில் பாலம்: பணிகள் அனைத்தும் ஓவர்… விரைவில் திறப்பு விழா!

ராமேசுவரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் ரயில்வே அமைச்சகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாம்பன் ரயில் பாலம் 1914ம் ஆண்டு கட்டப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினை, தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019 மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

வந்தே பாரத் ரயில்களின் வேகம் விரைவில் குறைப்பு

ரயில்கள் சந்திக்கும் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு, ரயிலின் வேகமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட, வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் விபத்து – அவசர கால எண்கள் அறிவிப்பு

5 பேர் உயிரிழப்பு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது 033-23508794, 033-23833326 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு Sealdah Station033-23508794033-23833326 GHY Station036127316210361273162203612731623 KIR Station6287801805 Katihar Station090020419529771441956 LMG Station0367426395803674263831036742631200367426312603674263858

நியூ ஜல்பைகுரி ரயில் விபத்து – ரயில்வே அமைச்சர் பதிவு

“எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்”

ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலி வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த விபரீதம் அபாய சங்கிலி வேலை செய்யாததால், அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை இழுத்த குடும்பத்தினர் ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் […]

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில் மேம்பாலம் பராமரிப்பில் சீர்கேடு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில்வே இணைப்பு மேம்பாலம் பராமரிப்பில் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் எம்எல்ஏ நேரில் வந்து ஆய்வு செய்தார். தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலை இணைப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த பாலம் பராமரிப்பு முறையாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அடிக்கடி அந்த பாலத்திற்கான நகரும் படிக்கட்டு அந்த பழுது அடைந்து விடுகிறது. அதை உடனடியாக யாரும் சரி செய்வது இல்லை. மேலும் […]

புயலால் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கி, ரயில் சேவை பாதித்தது. ஏராளமான ரயில்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 4 முதல் 5 நாட்கள் வரை ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில்வேக்கு ரூ.35 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். தெரிவித்துள்ளார்.இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: புயல் காரணமாக தெற்கு ரயில்வேயில் 605 மெயில் மற்றும் விரைவு […]